கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 மாசமாக வீட்டிற்குள் கிடந்த எலும்புகூடு.. தேங்காய் சிரட்டையை போட்டு என்ஜினியர் உடலை எரித்த கும்பல்!

என்ஜினியர் எரித்து கொன்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

கோவை: இறந்த சடலம் 4 மாதமாக வீட்டுக்குள்ளேயே கிடந்துள்ளது.. தேங்காய் சிரட்டை, பேப்பர் போட்டு.. மண்ணெண்ணெயை ஊற்றி என்ஜினியரை எரித்து கரிக்கட்டையாக்கி உள்ளனர் மர்ம நபர்கள்!

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி சக்திவேல் - அழகு.. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்... பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார் சக்திவேல்.. 42 வயதாகிறது..3 வருஷங்களுக்கு முன்பு கோவைக்கே வந்து வேலை பார்த்தார் சக்திவேல்.

male engineer murder near coimbatore

இவர் கோவை வந்ததில் இருந்தே மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்து கொண்டே இருந்தது. இதனால் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். மனைவியும் மகளை அழைத்து கொண்டு தனியாக போய்விட்டார்.

இதனால் சக்திவேல் தனி வாழ்க்கையை வாழ்ந்தார்.. சொந்த பந்தங்களை வெறுத்தார்... யாருடனும் பேசாமல் ஒதுங்கியே இருந்தநிலையில், தன் அக்காவிடம் மட்டும் அடிக்கடி போன் பேசுவார்.. ஆனால் 6 மாசமாக அக்காவுக்கு போனும் பண்ணவில்லை.. இதனால் தம்பிக்கு என்ன ஆனதோ என்று பயந்து, அவர் தன் மகன் தினேஷை கோவை அனுப்பி வைத்து, என்ன ஏதென்று பார்க்க சொன்னார்.

பீர் பாட்டிலை உடைத்து.. காமாட்சி கழுத்து, வயிற்றில் சரமாரியாக குத்திய ராஜன்.. காரணம் சந்தேகம்!பீர் பாட்டிலை உடைத்து.. காமாட்சி கழுத்து, வயிற்றில் சரமாரியாக குத்திய ராஜன்.. காரணம் சந்தேகம்!

தினேஷ் சக்திவேல் வீட்டுக்கு வந்தால் கதவு திறந்து கிடந்தது.. அதனால் உள்ளே சென்று பார்த்தபோது, சக்திவேல் தீயில் எரிந்து கருகி எலும்புக்கூடாக கிடந்தார்.. இதை பார்த்து அலறிய தினேஷ், உடனடியாக குனியமுத்தூர் போலீசில் புகார் தந்தார். போலீசார் விரைந்து வந்து சக்திவேல் சடலத்தை பார்வையிட்டனர்.. எப்படியும் இவர் இறந்து 4 மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள். மண்ணெண்ணெய் ஊற்றி, தேங்காய் சிரட்டை, பேப்பர்களை கொண்டு உடலை எரித்துள்ளனர்.

யார் கொலை செய்தார்கள் என தெரியவில்லை.. இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சக்திவேலுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் ஏதோ தகராறு இருந்துள்ளதாக சொல்கிறார்கள். அந்தபிரச்சனை காரணமா அல்லது மனைவியை பிரிந்து வாழ்வதால் ஏதாவது பெண் விவகாரமா என்றெல்லாம் தெரியவில்லை... ஆனால் 4 மாதமாக வீட்டுக்குள்ளேயே என்ஜினியர் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை தந்துள்ளது.

English summary
engineer killed and burnt near coimbatore and police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X