செம ஆக்ரோஷத்தில் அந்த ஒற்றை யானை.. விரட்ட முடியாமல் தவிக்கும் மக்கள்.. வருகிறது கும்கி
ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.
Recommended Video
கோவை: செம ஆக்ரோஷத்தில் இருக்கிறது அந்த ஒற்றை யானை.. அதை விரட்டதான் மக்கள் படாத பாடு பட்டு வருகிறார்கள்.
கோவை மாவட்டம் மற்றும் வரப்பாளையம், துடியலூர், பகுதிகளில் எப்பவுமே இருக்கிற தொல்லை யானைகள் வந்துவிடுவதுன். இங்கு நிறைய விவசாய நிலங்கள் இருக்கின்றன.
அதனால் இது தெரிந்து வைத்து கொண்ட யானைகள் காட்டுக்குள்ளிருந்து நேராக கிளம்பி இங்கு வந்து டேரா போடுவதுதான். தினமும் காலையிலயே வந்துவிடுவது. வயிறு முட்ட சாப்பிட்டு கிளம்பி போய் கொண்டே இருப்பது. இப்படிதான் நடந்து வருகிறது.
காட்டுக்குள் போகவில்லை
நேற்று சாயங்காலம்கூட கோவை துடியலூர் குருடம்பாளையம் பகுதியில் ஒரு யானை வந்திருக்கிறது. ஜோடி எல்லாம் இல்லை.. ஒத்தை ஆளா வந்திருக்கு. ஆனா சாப்பிட்டு விட்டு நடையை கட்டும் என்று பார்த்தால், ஊருக்குள் வந்து விட்டது. திரும்பவும் காட்டுக்கு போகவே இல்லை. ஏன்னும் தெரியல.
ஆக்ரோஷத்தில் யானை
எப்பவுமே யானைகள் கூட்டமாக இருந்தால்தான் நமக்கு நிம்மதி. இப்படி ஒத்தையா வந்துட்டா நமக்குதான் சிக்கல். நம்ம இனம் நம்முடன் இல்லையே என்று நினைத்து யானை ஆக்ரோஷம் ஆயிடுமாம். இப்பவும் இந்த யானை ஆக்ரோஷமாக இருக்காம். அதனால மக்கள் ரொம்பவே பயந்து போய் இருக்கிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் சொன்னார்கள். அவர்களும் விரைந்து யானையை வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்காங்க. அந்த யானைகிட்ட யாரையும் போக வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார்கள். பொதுமக்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று யானையை விட்டு அங்கே இங்கே என்று வனத்துறையினர் போவதே இல்லை.
கும்கி வரப்போகுது
இதை விரட்டி ஒரே வழி.... கும்கி யானைகளை வரவழைத்து இந்த ஒற்றை யானையை விரட்டலாம் என்று ஐடியா செய்துள்ளார்கள். பார்ப்போம்... இந்த கொம்பனை விரட்டும் அந்த கும்கி யார் என்று?