காதலித்தோம்.. பழகினோம்.. ஜாலியாக இருந்தோம்.. கழட்டிவிட பார்க்கிறார்.. லட்சுமி நாராயணனுக்கு சிக்கல்!
இளைஞர் மீது பெண் என்ஜினியர் பாலியல் புகார் அளித்துள்ளார்
Recommended Video
கோவை: "காதலித்தோம்.. நெருங்கி பழகினோம்.. ஜாலியாக இருந்தோம்.. இப்போது என்னை கழட்டிவிட பார்க்கிறார்" என்று பெண் என்ஜினியர் ஒருவர், கோவை எஸ்பி ஆபீசில் இளைஞர் மீது புகார் அளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் நிதிபாண்டே என்ற பெண். இவருக்கு 31 வயதாகிறது. இந்நிலையில், ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் சேர்ந்து வந்து கோவை எஸ்பி ஆபீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதன் சுருக்கம் இதுதான்:
"கத்தார் நாட்டில் ஏர்போர்ட்டில் என்ஜினியராக இருக்கிறேன். இதே ஏர்போர்ட்டில் என்ஜினீயராக வேலை பார்த்த லட்சுமி நாராயணன் அறிமுகமானார். அவர் கோவை வீரகேரளம் தென்றல் நகரை சேர்ந்தவர். இருவரும் காதலித்தோம்.. மருதமலை, திருப்பதி போன்ற இடங்களுக்கு சென்றோம். நெருக்கம் அதிகரித்தது.. கல்யாணம் செய்து கொள்ள போகிறவர் என்பதால் நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன்.
இரு வீட்டுக்கும் காதல் விவகாரம் தெரிந்ததும், கல்யாணத்துக்கு சம்மதித்தனர். ஆனால், லட்சுமி நாராயணனிடம்தான் மாற்றம் தெரிந்தது. அவர் என்னை விட்டு மெதுவாக விலகினார். வேறு பெண்ணை கல்யாணத்துக்கு பார்த்துக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.
என்னை காதலித்து ஏமாற்றிய லட்சுமி நாராயணனின் மீது நடவடிக்கை எடுக்க வடவள்ளி போலீஸ், பேரூர் மகளிர் போலீஸ், மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்து லட்சுமி நாராயணன் என்னை கல்யாணம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.