கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை.. 6 நாட்களுக்கு பிறகு இளைஞர் ஒருவர் கைது

Google Oneindia Tamil News

Recommended Video

    Kovai Girl News: கோவை சிறுமி கொலை.. 6 நாட்களுக்கு பிறகு இளைஞர் ஒருவர் கைது- வீடியோ

    கோவை: கோவை துடியலூரில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் 6 நாட்களுக்கு பிறகு இளைஞர் சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் குடியிருந்து வருபவர் பிரதீப் மற்றும் வனிதா. துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

    இவர்களது 7 வயது பெண் குழந்தை அருகில் உள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

    நட்ட நடு ரோட்டில் தேமுதிக கொடூரமாக வெட்டி கொலை.. உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது நட்ட நடு ரோட்டில் தேமுதிக கொடூரமாக வெட்டி கொலை.. உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது

    குழந்தை காணவில்லை

    குழந்தை காணவில்லை

    இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் குழந்தை காணாததைக் கண்டு பெற்றோர் அக்கம் பக்கம் தேடியுள்ளனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ்

    சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ்

    இந்நிலையில் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் காணாமல் போன குழந்தையின் வீட்டருகே உள்ள சிறிய சந்தில் முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கை

    பிரேத பரிசோதனை அறிக்கை

    இதையடுத்து அது காணாமல் போன பிரதீப்பின் குழந்தை என்பது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கை தற்போது வெளியானது.

    கழுத்து நெரித்து கொலை

    கழுத்து நெரித்து கொலை

    அதில் கோவை சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டு, நரம்புகள் துண்டானதால் இறந்தார். சிறுமியின் கழுத்தில் கயிறு போன்ற ஒரு பொருளை வைத்து இறுக்கி கொலை செய்ததாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இளைஞர் கைது

    இளைஞர் கைது

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் போலீஸார் கொலையாளி குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என துண்டுபிரசுரங்கள் வெளியிட்டும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் 6 நாட்கள் கழித்து சந்தோஷ்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

    English summary
    A youth named Santhosh kumar was arrested in connection with Coimbatore child sexual assault and murder case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X