அடப்பாவிகளா! ஊறுகாய்க்காக அடித்து கொலையா?.. கொன்ற வடமாநில இளைஞரின் புகைப்படம் வெளியீடு
கோவை: கோவை பீளமேடு பகுதியில் ஊறுகாய்க்காக சக நண்பனின் உயிரை பறித்த வட மாநில இளைஞரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்ற 4 இளைஞர்கள் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இவர்கள் நேற்று மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு சென்றனர்.
முதலில் இருவர் உணவு உட்கொண்டுவிட்டு சென்றுள்ளனர். பின்னர் 17 வயதான சித்துகுமாரும் , 20 வயதான பிரஜங்கி குமாரும் உணவருந்த சென்றுள்ளனர். இந்த நிலையில் அப்போது குழம்பு தீர்ந்ததால் சித்து தனது அறை தோழன் பிரஜங்கியிடம் ஊறுகாய் கேட்டுள்ளார்.
ஆனால் ஊறுகாய் தர மறுத்த பிரஜங்கி குமார், அதை மறைத்து வைத்துக் கொண்டார். பின்னர் இருவரும் இதனால் சண்டையிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் சண்டை உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சித்து குமாரை கழுத்தை நெரித்தும் எட்டி உதைத்தும் உள்ளார் பிரஜங்கி குமார்.
ஜெயலலிதா வரி பாக்கியை அரசு செலுத்துவதா? ஆம் ஆத்மி எதிர்ப்பு - ஹைகோர்ட்டில் வசீகரன் வழக்கு
இது போல் சரமாரியாக தாக்கிவிட்டு பிரஜங்கி குமார் வெளியேறிய நிலையில் மயக்கமடைந்த சித்துகுமாரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பீளமேடு போலிஸார் பிரஜங்கி குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஊறுகாய்க்காக தனது அறையில் சக நண்பரை கொன்ற வட மாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறந்த சித்துகுமார், மற்றும் கொலை செய்த பிரஜங்கி குமாரின் புகைப்படம் கிடைக்காமல் இருந்தது. அவர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பீளமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.