கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொள்ளாச்சி கொடூரம்… பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம்

Google Oneindia Tamil News

கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்களை பகிர்வதை தடுக்க வலியுறுத்தி பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

பொள்ளாச்சியில் பள்ளி , கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Pollachi horror: CBCID letter To Facebook, Whatsapp

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகையிலும் ஒரு பொள்ளாச்சி கொடூரம்.. பெண்களை ஏமாற்றிய பாலியல் கொடூரன் கைது.. ஆபாச படங்கள் வெளியீடுநாகையிலும் ஒரு பொள்ளாச்சி கொடூரம்.. பெண்களை ஏமாற்றிய பாலியல் கொடூரன் கைது.. ஆபாச படங்கள் வெளியீடு

மேலும், மின்னஞ்சல் மூலம் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களையும் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

English summary
CBCID Police letter To Facebook, Whatsapp to refrain from sharing videos on Pollachi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X