கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிச்சு கூத்தடிக்கிறாங்கன்னுதானே நினைச்சோம்.. புலம்பும் திருநாவுக்கரசு பண்ணை வீட்டு கிராம மக்கள்!

திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Pollachi Thirunavukkarasu: படிக்கும் போதே காம வெறியனாக வலம் வந்த திருநாவுக்கரசு- வீடியோ

    கோவை: "ஏதோ பசங்க எல்லாம் சேர்ந்து குடிச்சி கூத்தடிக்கிறாங்கன்னுதான் நினைச்சோம்.. ஆனா இப்படி அடுத்தவங்க குடியை கெடுப்பாங்கன்னு நாங்க நெனச்சுகூட பார்க்கலையே" என்று கொதித்துபோய் சொல்கிறார்கள் திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி பொதுமக்கள்!

    வலையில் சிக்கும் பெண்களை பண்ணை வீட்டுக்கு சொகுசு காரில் தூக்கி போட்டு வருவதுதான் திருநாவுக்கரசு குழுவினரின் வேலை.

    இந்த பண்ணை வீடு ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில் இருக்கிறது.

    வீடியோவாடா எடுக்கறீங்க வீடியோ.. போடு.. பொள்ளாச்சி காம கும்பலை சரமாரியாக தாக்கிய மக்கள்- வைரல் வீடியோ

    மக்கள் நடமாட்டம்

    மக்கள் நடமாட்டம்

    திருநாவுக்கரசுக்கு சொந்தமானது. சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் நெருக்கமாக காணப்படவில்லை. வீடுகள் இருந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்குமாம். நிறைய பேர் காலையில் வேலைக்கு போனால் இரவுதான் வீடு திரும்புவார்களாம்.

    கார்கள்

    கார்கள்

    இந்த சம்பவம் வெடித்து கிளம்பியவுடன்தான் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சர் சர்ரென கார்கள் பண்ணை வீட்டுக்கு பறக்குமாம். இதுபற்றி அப்பகுதி மக்கள் சொல்லும்போது, "ஏதோ ஆம்பள பசங்க எல்லாம் சேர்ந்து தண்ணி அடிக்கிறானுங்கன்னுதான் நெனச்சோம்.

    பைனான்ஸ்

    பைனான்ஸ்

    இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணுவாங்கன்னு கொஞ்சம்கூட நினைக்கல.. பைனான்ஸ் பண்ற பேர்ல எப்ப பார்த்தாலும் ஆம்பள பசங்கள கூட்டிட்டு அங்கங்கே இந்த திருநாவுக்கரசு பய திரிஞ்சிட்டு இருப்பான்.

    இனி வரட்டும்

    இனி வரட்டும்

    காலங்காத்தாலே 7 மணிக்கே இங்க சுத்திட்டு இருப்பான்.. கடைசியில பார்த்தா இன்னைக்கு இப்படி ஆயிடுச்சே... எங்களுக்கு பொம்பளங்க விஷயம்னு தெரியாம போயிடுச்சு. இந்த பக்கம் இனி வரட்டும் அவன்.. நாங்க பார்த்துக்கறோம்" என்று ஆவேசமாக தெரிவிக்கிறார்கள்.

    English summary
    The public is angry that we will not let Thirunavukarasu enter this Farm house area anymore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X