கோவை: கண்ணாடி துண்டுகள் மீது கரகாட்டம்.. உலக சாதனை நிகழ்த்திய கிராமிய புதல்வன்!
கோவை நாட்டுப்புற கலையில் தொடர்ந்து உலக சோதனையை செய்து வருபவர் கோவையைச் சேர்ந்த கலையரசன், இவர் கண்ணாடி துண்டுகள் மீது ஏறி கரகாட்டம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கிராமிய புதல்வன் அகாடமி எனும் கிராமிய கலை பயிற்சி மையம் நடத்தி வருகிறார் கலையரன். இவர் இளைய தலைமுறை இளைஞர்களுக்கு நாட்டுப்புற கலைகளை கற்று தருவதோடு கிராமிய கலைகளில் பல்வேறு உலக சாதனைகளை செய்து ஊக்கமும் அளித்து வருகிறார்.
கலையரசன் மேலும் ஒரு சாதனை முயற்சியாக தலையில் கரகம் வைத்தபடி கண்ணாடி துண்டுகள் மீது நின்றபடி தொடர்ந்து மூன்று மணி நேரம் கரகாட்டம் ஆடி சாதனை முயற்சியில் ஈடுபட்டார். நோபள் புக் ஆப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழை தீர்ப்பாளர் தியாகு நாகராஜன் வழங்கி கவுரவித்தார்.
கலையரசன் தனது சாதனை முயற்சி குறித்து கூறுகையில், புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அண்மையில் புற்றுநோயால் மறைந்த திரைப்பட நடிகர் தவசிக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.