போராட்டக்களமான பொள்ளாச்சி .. போராட்டத்தை தவிர்க்க விடுமுறை அறிவித்த சில தனியார் கல்லூரிகள்
Recommended Video
கோவை: பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து பல்வேறு கல்லூரிகளில் போராட்டம் நடத்துவதை அடுத்து அதை தடுக்க பொள்ளாச்சியில் உள்ள சில தனியார் கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ளன.
200-க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை சூறையாடிய விவகாரத்தில் இதுவரை 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 7 ஆண்டுகளாக இது போல் செய்து வரும் இவர்கள் ஒரு பெண் கொடுத்த புகாரினால் சிக்கினர்.
மொத்தம் 20 பேர் கொண்ட நெட்வொர்க் எனக் கூறப்படும் நிலையில் போலீஸார் 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மொத்த குற்றவாளிகளையும் கைது செய்யுமாறு மாணவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
லெஸ்பியனா இருக்கலாமா.. சென்னை பெண் டாக்டரை பேசியே மடக்கிய திருநாவுக்கரசு.. பகீர் தகவல்கள்!
மேலும் 7 ஆண்டுகளாக இது போல் செய்து வரும் அவர்களுக்கு பின்புலத்தில் அரசியல் வாரிசுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே அரசியல் வாரிசுகளையும் கைது செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்களை போலீஸார் நேற்று கலைத்தனர். எனினும் சில மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த போராட்டத்தை தடுக்க பொள்ளாச்சியில் உள்ள சில தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.