கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நைட்டி மாட்டி கொண்டு.. காலில் சலக் சலக் கொலுசு.. யார்னு பார்த்தீங்களா.. எதுக்குன்னு தெரியுமா..வீடியோ

நைட்டி அணிந்து உள்ளாடைகளை திருடுகிறார் மர்மநபர் ஒருவர்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்களின் உள்ளாடைகளை திருடும் வினோத திருடன் |men theft womens inners

    கோவை: பெண்களின் உள்ளாடைகளை பார்த்தாலே இவருக்கு குஷியாகிவிடும்.. அது மட்டுமில்லை.. நைட்டியை மாட்டிக் கொண்டு, காலில் கொலுசு போட்டுக் கொண்டுதான் கிளம்புகிறார்.. ஆபீசுக்கு இல்லை, திருடுவதற்கு!!!

    கோவை துடியலூர் அருகே மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பில் கொஞ்ச நாட்களாகவே பெண்களின் உள்ளாடைகள் மிஸ்ஸிங்!

    யார் எடுக்கிறார்கள், எப்போது எடுக்கிறார்கள் என்பது மட்டும் தெரியவே இல்லை.. இதுபோக சுடிதார், செருப்புகளும் மாயமாகி வந்தன.. காணாமல் போவது எல்லாமே பெண்கள் அணியும் சமாச்சாரங்கள்தான்.. அதனால் பலருக்கும் இது குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வந்தது.

    நைட்டி மேன்

    நைட்டி மேன்

    பிறகு திடீரென ஒரு வீட்டின் முன்பு ஏகப்பட்ட செருப்புகளும், நைட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர்.. ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.. அதனால் குடியிருப்புவாசிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்... அப்போதுதான் ஒரு பெண்மணி வருவது தெரிந்தது.. ஆனால் அவரை உற்று பார்த்தபோதுதான் ஆண் என்று தெரிந்தது.

    உள்ளாடைகள்

    உள்ளாடைகள்

    நைட்டி போட்டுக் கொண்டு.. காலில் கொலுசுடன் நடந்து வந்தார்... பெண்களின் உள்ளாடைகள், செருப்புகளை திருடி கொண்டு அசால்ட்டாக நடந்து கொண்டிருந்தார். வீடியோவில் இந்த காட்சியை பார்த்ததும் மக்கள் அரண்டு போய்விட்டனர்... பிறகு திருடிய உள்ளாடைகள், செருப்புகளை அந்த நபர் ஒதுக்குப்புறமாக தீ வைத்து எரித்துள்ளார்.

    துடியலூர்

    துடியலூர்

    அந்த சைக்கோ திருடர் யார் என்று தெரியவில்லை.. அவர் நடவடிக்கைகள் எல்லாமே பயத்தை உண்டுபண்ணி உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.. துடியலூர் போலீசிலும் புகார் தந்துள்ளனர்... இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு இதே துடியலூரில் ஒரு நபர், நள்ளிரவு நேரங்களில் சுவர் ஏறி குதித்து.. குடியுருப்புவாசிகளின் பெட்ரூம்களை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து வருகிறார் என்ற புகார்கள் வந்தன.

    வேறு வேறு நபர்?

    வேறு வேறு நபர்?

    அது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது. இப்போது நைட்டி மனிதர் விவகாரம் புதுசாக ஆரம்பித்துள்ளது.. இவர்கள் இருவருமே ஒரே ஆள்தானா.. அல்லது வேறு வேறு நபர்களா என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். ஆனால் இந்த சைக்கோ நபரை நினைத்து, தங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள்.

    English summary
    psycho theft womens inners near thudiyalur and police investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X