கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது..புகழேந்தி தடாலடி | pugazhendi Pressmeet

    கோவை: அமமுக பாதி அழிந்துவிட்டதாக அதிருப்தி நிர்வாகி பெங்களூர் புகழேந்தி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    கோவை மாவட்ட அமமுக நிர்வாகிகள் சிலர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் புகழேந்தி ஈடுபட்டார்.

    இதற்காக கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அவர்களை அழைத்தார். அப்போது அவர்களிடம் தினகரனை இந்த உலகுக்கு அடையாளம் காட்டியவர்களே நான்தான் என்றார். மேலும் தினகரனை பற்றி கடுமையாகவும் விமர்சனம் செய்தார்.

    விக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சிவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி

    விசாரித்து நடவடிக்கை

    விசாரித்து நடவடிக்கை

    இந்த வீடியோ பகிரங்கமாக வெளியானது. இதில் பேசியதை புகழேந்தி ஒப்புக் கொண்டார். இதுகுறித்து தினகரன் கூறுகையில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அமமுக செய்தி தொடர்பாளர்கள்

    அமமுக செய்தி தொடர்பாளர்கள்

    இந்தநிலையில் நேற்றைய தினம் அமமுக செய்தி தொடர்பாளர்கள் பட்டியலை நேற்று தினகரன் வெளியிட்டார். அதில் புகழேந்தியின் பெயர் இடம்பெறவில்லை.

    புகழேந்தி

    புகழேந்தி

    இதுகுறித்து புகழேந்தி தஞ்சாவூரில் கூறுகையில் கட்சியே என்னுடையது. அமமுகவை ஆரம்பித்ததில் நானும் ஒருவன். நான் யாரையும் நம்பி இல்லை என புகழேந்தி தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னரே கோவையில் அமமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    புகழேந்தி தகவல்

    புகழேந்தி தகவல்

    அப்போது அவர் கூறுகையில் செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் என்னுடைய பெயர் விடுபட்டு இருந்தது. ஆனால் என்னை நீக்கிவிட்டேன் என தினகரன் சொல்லவில்லை. மண்டலப் பொறுப்பாளர்களால் இந்த இயக்கம் பாதி அழிந்து விட்டது. நான் எந்த கட்சிக்கும் போவதாக இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக புத்தகம் வெளியிட உள்ளேன். அதில் பல உண்மைகள் வெளியே வரும் என்றார் புகழேந்தி.

    English summary
    Pugazhendi says that he will release book related to Disproportionate assets. In this book so many things will come out.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X