கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

16 வயசு பெண்ணை நாசம் செய்த 6 பேர்.. மீண்டும் அதிர வைத்த பொள்ளாச்சி!

பொள்ளாச்சியில் 16 வயது பெண்ணை நாசம் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்றாலே இப்போதெல்லாம் நடுங்குகிறது.. 16 வயது சிறுமியை 6 பேர் கூட்டாக சேர்ந்து நாசம் செய்திருக்கிறார்கள். இதையடுத்து அந்த 6 பேரையும் வளைத்து பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்ததற்கு இன்னும் ஒரு தீர்வு தெரியவில்லை. இளம்பெண்களை மிரட்டி சீரழித்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்ன ஆயிற்று என்றும் தெரியவில்லை.

போன மாதம்கூட ஸ்கூலுக்கு செல்லும் மாணவிகளிடம் 4 பேர் கொண்ட கும்பல் லவ் டார்ச்சர் செய்துள்ளது. அதற்கு மாணவிகள் மறுக்கவும், அவர்களை வழிமறித்து, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டி வந்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக ஒரு மாணவியின் பெற்றோர் போலீசில் சொல்லி, அது சம்பந்தமான நடவடிக்கையும் போய் கொண்டிருக்கிறது.

திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற திருநங்கையர்.. திடுக்கிட்டு போன மக்கள்.. கோவையில் பரபரப்பு திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற திருநங்கையர்.. திடுக்கிட்டு போன மக்கள்.. கோவையில் பரபரப்பு

பராமரிப்பு

பராமரிப்பு

இப்போது அடுத்த விவகாரம் தலைதூக்கி உள்ளது. 16 வயசு பெண்.. இந்த சிறுமியின் தந்தை வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதனால் இந்த பெண் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கொஞ்ச நாளாக ஸ்கூலுக்கு போகாமல் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.

நண்பர்கள்

நண்பர்கள்

இந்நிலையில், நேற்று முன்தினம், தன் வீட்டுக்கு வரும்படி பெண்ணை அழைத்துள்ளான் காதலன். அதன்படியே சென்ற பெண், காதலனுடன் நீண்ட நேரம் வீட்டில் தனியாக உட்கார்ந்து பேசி கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில், காதலனின் நண்பர்கள் 5 பேர் வீட்டுக்குள் திடுதிப்பென்று நுழைந்துள்ளனர்.

கூட்டு பலாத்காரம்

கூட்டு பலாத்காரம்

இறுதியில் காதலனுடன் சேர்ந்து 6 பேரும் கும்பலாக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. அந்த கும்பலிடம் இருந்து தப்பிய பெண், சொந்தக்காரர்களிடம் நடந்ததை சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் இது பற்றி புகார் அளிக்கப்பட்டது.

கைது

கைது

அந்த புகாரின்பேரில் போலீசாரும் துரிதமாக இந்த விசாரணையில் இறங்கி நேற்று இரவே அந்த 6 பேரையும் ரவுண்டு கட்டி பிடித்துவிட்டனர். அவர்களை கைது செய்து விசாரணையும் நடந்து வருகிறது.

English summary
6 people arrested including lover for 16 year old school girl sexually abused near Pollachi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X