ரயில் நிலையம் முற்றுகை, சாலை மறியல்... கோவையில் 700 க்கும் மேற்பட்டோர் கைது
Recommended Video
கோவை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட தொழிற் சங்கதினரை போலீசார் கைது செய்தனர்.
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உத்திரவாதம் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் 48 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக 25-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், பொதுத்துறை ஊழியர்கள் கோவை ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ரயில் நிலையத்தின் நுழைவாயில் முன்பு அமர்ந்து இருபது நிமிடங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 800 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.