வாக்குகள் 38 மையங்களில் எண்ணப்பட உள்ளது... துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு
Recommended Video
கோவை: வாக்கு பதிவு நிறைவு பெற்ற நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் முத்திரையிடபட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்று நிறைவடைந்தது.
6 மணிக்கு முன்பு வாக்கு பதிவு மையங்களுக்கு வந்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களித்தனர். பெரும்பாலான இடங்களில் வாக்கு பதிவு நிறைவு பெற்ற நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் முத்திரையிடபட்டுவிட்டது.
வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் பலத்த போலீஸ் காவலில் வைக்கப்படும். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் 38 மையங்களில் எண்ணப்பட உள்ளது. மேலும் வரும் மே 23 ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் 81% வாக்குப் பதிவு.. 2014ம் ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு!
38 தொகுதிகளில் நடந்த மக்களவை தேர்தலில், அதிகபட்சமாக நாமக்கலில் 78% வாக்குகள் பதிவாகியது. 2வது அதிகபட்சமாக சிதம்பரத்தில் 76.03 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 75.18 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.05% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதாசாஹூ தெரிவித்துள்ளார்.