திமுகவினரின் நில அபகரிப்பால் பாதிப்பு... கருணை கொலை செய்ய அனுமதி கோரும் திருப்பூர் நபர்
கோவை: கோவையில் உள்ள அரசூர் பகுதியில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை திமுக பிரமுகர்கள் அபகரித்துவிட்டதால் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு சொந்தமாக கோவையில் உள்ள அரசூர் பகுதியில் இடம் உள்ளது. அதன் தற்போதைய மார்க்கெட் மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது.
இந்த இடத்தை மேட்டுப்பாளையம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அருண்குமார் மற்றும் திமுக பிரமுகர் சன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் போலியாக சொத்து பத்திரத்தை போலியாக தயாரித்து அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
பல்வேறு வகையில் போராடியும் எனது பூர்வீக சொத்தை அவரால் மீட்க முடியவில்லை. காவல் நிலையத்தில் புகார் கூறியும் பயனில்லை. இதனால் சொத்தை மீட்டுத் தர வேண்டும். இல்லையெனில் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கந்தசாமி மனு அளித்துள்ளார்.