டிடிஎஃப் வாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஸ்தம்பித்த கோவை.. நீண்ட நாள் சீக்ரெட்டை உடைத்த யூடியூபர்
கோவை: மாமா பெண்ணை சீக்கிரமே காட்ட போகிறேன் என பிறந்தநாள் கொண்டாட்டத்தில் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவையைச் சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் டிராவல் விபிலாகராக உள்ளார். இவர் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு Twin Throttlers you tube சேனலை தொடங்கிய போது அவரின் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
இதையடுத்து சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை கூடியது. இவருக்கு சுமார் 2 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் தனது வாகனங்களில் அதிவேக பயணத்தை செய்து வருகிறார்.
”டேய்.. யார்டா அது? ஆஃப் பண்ண சொல்லுடா” - லைவில் TTF வாசன் டென்சன்.. இந்த வயசுல இவ்ளோ கோபமா?
கோவை டூ லடாக்
வாகனத்திலேயே கோவையிலிருந்து லடாக் வரையும் கோவையிலிருந்து நேபாளம் வரையிலும் பயணித்துள்ளார். பைக்குகளில் சாகசம் செய்வதென்றால் இளசுகளுக்கு பிடிக்கும். அதிலும் இவர் சூப்பர் பைக்குகளில் அதிவேகத்தில் டிராவல் செய்வதை பார்த்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பிறந்தநாள்
ஒவ்வொரு பிறந்தநாளையும் வீட்டுக்குள்ளேயும் நெருங்கிய நண்பர்களுடனும் கொண்டாடி வந்த டிடிஎஃப் வாசன், தற்போது இந்த பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். பெரிய நெட் அமைக்கப்பட்டு அதில் டிடிஎஃப் வாசன் கேக் வெட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
டிடிஎஃப் வாசன்
அந்த நெட் வைக்கப்பட்ட இடத்திற்கு வருவதற்கே வாசன் ரசிகர்களின் அன்பு மழையில் நீந்தி வந்தார். அவர் வரும் போது டிடிஎஃப், டிடிஎஃப் என கோஷங்களை இட்டனர். பின்னர் பிறந்தநாள் கேக்குகளை ரசிகர்களுக்கு ஊட்டிவிட்டார். அவர்களும் இவருக்கு ஊட்டிவிட்டனர். இவருக்கு வந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது ஏதோ சூப்பர் ஸ்டார் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் கூட்டம் இருப்பதை போன்று இருந்தது.
மாமா பெண்
இந்த நிகழ்ச்சியில் தனியார் ஊடகம் ஒன்று அவரை பேட்டி எடுத்தது. அப்போது தனது அப்பா இருந்திருந்தால் தனக்கு கிடைக்கும் இந்த அன்பை பார்த்து நெகிழ்ந்திருப்பார் என வாசன் உருக்கமாக தெரிவித்தார். அடுத்த வெளிநாட்டு பயணம் குறித்து விரைவில் திட்டமிடவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அடுத்த சூப்பர் பைக்கை விரைவில் வாங்குவதாகவும் தெரிவித்திருந்தார். மாமா பெண்ணை எப்போது அறிமுகப்படுத்த போகிறீர்கள் என்ற கேள்விக்கு விரைவில் 2 அல்லது 3 வருஷங்களில் அறிமுகப்படுத்துவேன் என்றார்.