கோவையில் பறை இசைக் கலைஞரை மறுமணம் செய்த உடுமலை கவுசல்யா
Recommended Video
கோவை: கோவையில் பறை இசைக் கலைஞரை கவுசல்யா மறுமணம் செய்துக் கொண்டார்.
உடுமலையை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு சங்கர் என்பவரை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்களை மீறி திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ம் தேதி உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் கவுசல்யாவின் பெற்றோர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து சங்கரை கொன்றவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என இறுதி வரை போராடினார் கவுசல்யா. அதில் வெற்றியும் கண்ட அவர் தந்தை உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை பெற்று தந்தார்.
இசை கலைஞர்
தொடர்ந்து ஆணவக் கொலைகளுக்காக போராடி வந்த அவர் கோவைச் சேர்ந்த இளைஞர் சக்தியை மறுமணம் செய்தார். அவர் பறை இசை கலைஞர் ஆவார்.
[அதிர வைத்த பறை.. ஓங்கி ஒலித்த இசை.. இது கவுசல்யா வாழ்வின் போராட்ட கீதம்! ]
காதல் திருமணம்
இவர்களது திருமணம் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலககமான பெரியார் படிப்பகத்தில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சக்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கவுசல்யா.
விடுதலை சிறுத்தைகள்
கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார்.
திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் , விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர்
சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை நிறுவி சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும் , பெண்கள் ஒடுக்கப்படும் விஷயங்களிலும் செயற்பாட்டளாராக இருந்து வருகிறார் கவுசல்யா. சக்தி, பறையிசையை பரவலாக்க நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.