"திருமாவளவனுக்கு சேலை கட்டுவேன்.. இது பாகிஸ்தான் இல்லை".. வேலூர் இப்ராஹிம் கொந்தளிப்பு
திருமாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக வேலூர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்
கோவை: இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும், விசிக தலைவர் திருமாவளவனுக்கு சேலை கட்டுவேன்.. திருமாவளவன் கட்சியினர் எங்களை மாவட்டத்திற்குள் விடமாட்டேன் என்கின்றனர். இது பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை... எனது பிரச்சாரத்தை தொடங்குவேன்" என்று ஏகத்துவ ஜமாத்தின் தலைவர் வேலூர் இப்ராகிம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது இதுதான்:
"மத நல்லிணக்கம் தமிழ்நாட்டில் நீடித்து வருகிறது... ஆனால் 20 வருஷமாக இந்துக்கள், இஸ்லாமியர்கள் நல்லிணக்கத்திற்கு சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களும் திராவிட அரசியலும் சிதைக்கும் வகையில் ஏற்படுத்துகிறது.
நான் பிரதமரின் திட்டங்களை ஆதரிக்கிறேன்... அதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறேன். இதற்காகவே இஸ்லாமியர்களுக்கு எதிரானவராக என்னை சித்தரிக்கிறார்கள்.. இந்து மதத்தை இழிவுபடுத்தி விட்டு, பிற மதங்களை புகழ்ந்து திருமாவளவன் பேசுகிறார்...
மத நல்லிணக்கத்தை நாங்கள் முன்னெடுக்கும் போது, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்... பெரியார் செய்த காரியத்தைத்தான் திருமாவளவனும் செய்கிறார்.
இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ மத வெறித்தனத்தை வெளிப்படுத்தி வருகிறது... இதுபோன்ற அமைப்புகளோடு திருமாவளவன் கொஞ்சுகிறார்... இந்து மதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது போல், இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் தவறுகளையும் தட்டிக் கேட்க வேண்டும். இனியும் இதனை செய்தால் திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும்.
கர்நாடக கிராம பஞ்சாயத்து தேர்தல்.. விவசாயிகள் பாஜகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர்.. சித்தராமையா தாக்கு
திருமாவளவன் கட்சியினர் எங்களை மாவட்டத்திற்குள் விடமாட்டேன் என்கின்றனர். இது பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை... எனது பிரச்சாரத்தை தொடங்குவேன்.. எனது பிரச்சாரம் மத நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். மத்திய அரசின் பல திட்டங்களை அதிமுக ஆதரித்துள்ளது. ஆனால், அனைத்து திட்டங்களையும் ஸ்டாலின் எதிர்க்கிறார்... வெறும் அரசியல் லாபத்திற்காகச் செய்கின்றனர்.
வாக்குவங்கிக்காக இவர்கள் மோசமான அரசியல் செய்கின்றனர் என்பதை இஸ்லாமிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்... திராவிட அரசியல் என்பது மக்களை போலியான தவறான முறையில் வாக்குறுதிகளை அளித்து, தமிழகத்தில் தேச நலனைப் பற்றி பேசுபவர்களை நகைச்சுவையாளராக மாற்றியுள்ளனர். தமிழகத்தில் தேசியத்தை மையப்படுத்தும் ஆட்சி வர வேண்டும். திமுகவை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுகவுடனான கூட்டணி மட்டுமே சாத்தியமாகும். வரும் காலங்களில் பாஜக தமிழகத்தில் சொந்தக்காலில் நிற்கும்" என்றார்.