ஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்.. வாக்களியுங்கள்.. மார்க்சிஸ்ட் அதிரடி வாக்குறுதி!
தேர்தலில் வெற்றி பெற்றால் ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளியேற்றுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் வாக்குறுதி அளித்துள்ளார்.
கோயம்புத்தூர்: தேர்தலில் வெற்றி பெற்றால் ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளியேற்றுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் வாக்குறுதி அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் எங்கு போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கும் வனப்பகுதி ஆக்கிரமிப்பு பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது கையில் எடுத்து இருக்கிறது.
வயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது!
யார் இவர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவையில் பி.ஆர் நடராஜன் போட்டியிடுகிறார். இவர் கோவை மக்களவை தொகுதி முன்னாள் எம்பி ஆவார். அங்கு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர் இவர்.
என்ன வாக்குறுதி
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் அளித்துள்ள வாக்குறுதியில், நாங்கள் வெற்றி பெற்றால் ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளியேற்றுவோம். இது கண்டிப்பாக நடக்கும். கோவையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காட்டுப்பகுதிகளை அகற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
என்ன செய்தார்கள்? என்ன பேசினார்கள்.. தமிழக எம்பிக்கள் 5 வருடத்தில் செயல்பட்டது எப்படி தெரியுமா?
ஏற்கனவே
கோவையில் ஜக்கி வாசுதேவ் மூலம் 13 லட்சம் சதுர அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே இதில் குற்றஞ்சாட்டி இருந்தது. வெள்ளையங்கிரி காட்டுப்பகுதியில் மிகப்பெரிய அளவில் ஜக்கி வாசுதேவ் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, முறைகேடாக கட்டிடம் கட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு இருக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் கூட்டாக அறிவித்து இருந்தது.
எதிராக வாக்குறுதி
இந்த நிலையில்தான் தற்போது ஜக்கி வாசுதேவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்கி உள்ளது. கோவையில் ஜக்கி வாசுதேவ் அமைத்து இருக்கும் ஆதியோகி சிவன் சிலை உலகம் முழுக்க பிரபலம் ஆகும். இந்தியாவின் முக்கிய தலைவர்கள் இங்கு வழிபாட்டிற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.