பார் நாகராஜுக்கு நெஞ்சு வலியாம்.. இதை போலீஸ் நம்பணுமாம்.. டாக்டர்கள் வைத்த குட்டு.. மீண்டும் சிறை!
கைதான பார் நாகராஜ் தனக்கு நெஞ்சு வலி என்று பொய் சொல்லியுள்ளார்
Recommended Video
கோவை: "என்னது.. பார் நாகராஜுக்கு நெஞ்சு வலியா... அடப்பாவமே.." என்று கூட சொல்ல தோன்றவில்லை. எல்லாமே பித்தலாட்டம்தான்!
நூற்றுக்கணக்கான பெண்களை கெடுத்து, நாசம் செய்த பொள்ளாச்சி கும்பலில் சம்பந்தப்பட்டவராக கருதப்படுபவர் பார் நாகராஜ்.
அதிமுகவுக்கு நெருங்கிய புள்ளியாக பார்க்கப்படுபவர். இது சம்பந்தமாக நாகராஜே பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும் புள்ளிகளுடன் எடுத்து கொண்ட போட்டோக்களும் வைரலாகின.
இளம் பெண்ணுக்கு முட்டியில் நடந்த ஆபரேஷன்.. கையை வைத்து அசிங்கமாக நடந்து கொண்ட அப்போலோ ஊழியர்!
திடீர் கைது
ஆனால் இந்த சமாச்சாரம் எல்லாம் வெளியே வருவதற்கு முன்னமேயே நாகராஜை கட்சியில் இருந்து தூக்கி அடித்தது அதிமுக! இதற்கு நடுவில் என்ன ஆச்சோ தெரியவில்லை.. போன 7ம் தேதி பார் நாகராஜ் திடீரென்று கைதானார்.
நாய் பிரச்சனை
எதற்காக இந்த கைது நடவடிக்கை தெரியுமா? யாரோ ஒரு இளைஞன் நாய் ஒன்று வளர்த்து வந்திருக்கிறான். அதனை 25 ஆயிரம் ரூபாய்க்கு சபரீசன் விலைக்கு வாங்கி உள்ளார். இந்த நாய் வாங்குவதில், வேண்டுமென்றே ஒரு சண்டையை உருவாக்கி... அந்த நாய் வைத்திருந்த இளைஞனை சரமாரியாக வெளுத்து விட்டனர் பார் நாகராஜின் ஆட்கள்.
14 பேர் கைது
இது சம்பந்தமாக உடனடியாக போலீஸ் இறங்கி, ரெண்டு தரப்பிலும் 14 பேர் மீது கேஸ் போட்டு கோவை ஜெயிலில் கம்பி எண்ண வைத்துவிட்டனர். இப்படித்தான் கைதானார் நாகராஜ்!
நாய் மேட்டர்
திருநாவுக்கரசு & கோ கைதாகி ரொம்ப நாள் ஆகியும் பார் நாகராஜ் கைது செய்யப்படவில்லை.. டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியதாக உட்பட எத்தனையோ புகார்கள் வந்தும் நாகராஜ் கைது செய்யப்படவில்லை. மாறாக "சொந்த கிராமத்தில் பாதுகாப்பாக இருக்கும்படி என்னை போலீசாரே சொன்னார்கள்" என்று சொல்லி வந்த நாகராஜைதான் இந்த நாய் வாங்கிற விஷயத்தில் அதே போலீஸ் கைது செய்துள்ளது.
திடீர் நெஞ்சுவலி
சரி, கைதாகி நாகராஜ் ஜெயிலில் இருந்தாரா... அதுவும் இல்லை.. வந்துவிட்டது திடீர் நெஞ்சுவலி. அதனால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார். ஆனால் டாக்டர்களோ செக் செய்து பார்த்துவிட்டு, "யு ஆர் பெர்பெக்ட்லி ஆல் ரைட்" என்று சொல்லி திரும்பவும் ஜெயிலுக்கே அனுப்பிட்டாங்களாம்!
மாஸ்டர் பிளான்
இது எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா? சிபிஐ பொள்ளாச்சி விஷயத்தை நோண்டி நுங்கெடுத்து வருகிறது. இதில் மட்டும் நாகராஜ் சிக்கி கொண்டால் அவ்வளவுதான்.. அதனால் அடிதடி கேஸில் உள்ளே தள்ளிவிட்டால், சிபிஐ விசாரணையை ஜவ்வு மாதிரி இழுக்கலாம் என்பதுதான் மாஸ்டர் பிளான்! நாகராஜுக்கு ஆதரவாக ஒருசில போலீசார் இப்படி ஒரு ஐடியாவை தந்ததால்.. ஜெயிலில் சேஃப்டியாக இருக்கிறாராம் நாகராஜ்!