60 வருஷ பழமையான செவுருங்க.. இப்படி அநியாயம் பண்றாங்களே.. கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா
கோவை: இட தகராறு காரணமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், எனது உறவினர்கள் செல்வராஜ் மற்றும் குப்புசாமி ஆகியோர் வீட்டின் வழியை ஆக்கிரமித்து வீடு கட்டுகிறார்கள். எங்கள் வீட்டு சுவர் 60 வருட பழமையானது.
பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் அவர்கள் வீடு கட்டுவதால், எங்கள் வீடு இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சத்தோடு உள்ளே இருக்கிறோம்.
தேனியில் காங்கிரஸ் பேரணிக்கு தடை விதித்த போலீஸ்... கைது செய்யப்பட்ட கே.எஸ்.அழகிரி..!
பூர்வீக சொத்தான அந்த இடத்தை பிரித்து எழுதி தர வேண்டும் எனவும் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.