என்னை மன்னிச்சிடுங்க.. சீசரை நல்லா பார்த்துக்குங்க.. தூக்கில் தொங்கிய திவ்யா.. கோவை பரிதாபம்!
கோவை: "அம்மா, அப்பா, தம்பி.. என்னை மன்னிச்சிடுங்க.. என் சீசரை நல்லா பார்த்துக்குங்க" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் கவிதா தூக்கில் தொங்கிவிட்டார்.
கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் காமாட்சிபுரம் ராஜலட்சுமி கார்டனை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கவிதா. 23 வயதாகிறது
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பத்திர எழுத்தர் ஆபீசில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நாய்க்குட்டி என்றால் ரொம்ப பிரியம். அதனால் 2 வருஷமாக ஒரு நாயை வளர்த்து வந்தார்.
கவிதா
ஆனால் நாய் வளர்ப்பது கவிதாவின் அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் அந்த நாய் ராத்திரி நேரங்களில் குரைத்து கொண்டே இருப்பது, அக்கம் பக்கத்து வீட்டினருக்கு தொந்தரவாக இருந்தது. அதனால் அவரது அப்பா கடுப்பாகிவிட்டார்.
தரவே மாட்டேன்
அடுத்தவர்களுக்கு தொந்தரவாக இருப்பதால், நாயை வேறு யாரிடமாவது தந்துவிடலாமா என்று மகளிடம் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த கவிதா, நாயை தரவே மாட்டேன் என்கிட்டதான் இருக்கும் என்று உறுதியாக சொல்லி விட்டார். இருந்தாலும் அப்பா, நாயை தூக்கி கொண்டு போய் யாரிடமாவது தந்துவிடுவார் என்று பயந்து கொண்டே இருந்தார்.
தற்கொலை
ஒருகட்டத்தில் மனம் உடைந்த கவிதா, இரவு வீட்டில் எல்லோரும் தூங்கிய சமயம், ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்ததும் மகளின் சடலத்தை க கண்டு பெற்றோர் கதறி துடித்தனர். இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசுக்கு தகவல் தரப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
சீசர்
அப்போது, கவிதா ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், "அம்மா, அப்பா, தம்பி.. என்னை மன்னிச்சிடுங்க.. என் செல்ல நாய் சீசரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாயை தன்னிடமிருந்து அப்பா பிரிக்க நினைத்ததால், படித்த பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை தந்துள்ளது.