கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏம்மா கடன் வாங்கினே.. அப்படி நான் கல்யாணம் பண்ணிக்கணுமா.. வேதனைப்பட்ட சத்யா..கிணற்றில் குதித்த சோகம்

இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏம்மா கடன் வாங்கினே.. அப்படி நான் கல்யாணம் பண்ணிக்கணுமா..

    கோவை: "ஏம்மா.. கடன் வாங்கினே.. இருக்கிற பிரச்சனை நமக்கு போதாதா.. கடன் வாங்கிதான் எனக்கு கல்யாணம் செய்யணுமா? " என்று மனம் நொந்து வருத்தப்பட்ட இளம்பெண் தற்கொலையே செய்து கொண்டார்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த தம்பதி சந்திரன் - மோகனா. இவர்களுக்கு 21 வயதில் சத்யா என்ற மகளும், 18 வயதில் பிரவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். 2 வருஷத்துக்கு முன்பு சந்திரன் இறந்துவிடவும், மோகனா, தன் 2 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு கோவை வந்தார். பீடம்பள்ளி பகுதியில் தங்கி விவசாய கூலி வேலைக்கு சென்று வந்து குடும்பத்தை காப்பாற்றினார்.

    இந்த சமயத்தில், சத்யாவுக்கு கோவையை சேர்ந்த ஒரு இளைஞரை பார்த்து கல்யாணத்துக்கு பேசி முடித்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயமும் நடந்து முடிந்தது. அடுத்த மாசம் கல்யாண தேதி குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று காலையில் இருந்து சத்யாவை காணவில்லை. அக்கம் பக்கத்தினரும் தேடி பார்க்க ஆரம்பித்தனர்.

    பிரேத பரிசோதனை

    பிரேத பரிசோதனை

    அப்போதுதான், அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சத்யா பிணமாக மிதந்தார். தகவலறிந்து சூலூர் போலீசாரும் விசாரணையை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடிதான் சத்யாவை உடலை மேலே கொண்டுவந்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

    கடன்

    கடன்

    விசாரணையில், சந்திரனுக்கு நிறைய கடன் இருந்திருக்கிறது.. கடனாளியாகவே குடும்பத்தினரை விட்டு அவர் இறந்துவிட்டார்.. அந்த கடனை கடனை அடைக்கதான் மோகனா கோவைக்கே வந்து கூலி வேலை செய்ய ஆரம்பித்தார். கிடைத்த வருமானத்தில் குடும்பத்தையும், கொஞ்சம் கொஞ்சமாக கடனையுடம் அடைத்து வந்திருக்கிறார்.

    மனகஷ்டம்

    மனகஷ்டம்

    மகளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிவிடவும், இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி உள்ளார் மோகனா. இதுதான் மகளுக்கு மனகஷ்டத்தை தந்தது. ஏற்கனவே கடன் இருக்கும்போது, இன்னும் எதுக்காக கடன் வாங்கினீங்க என்று சத்யா கேட்டிருக்கிறார். இதனாலேயே மனம் நொந்து கிணற்றில் சத்யா குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

    சோகம்

    சோகம்

    எனினும் சத்யா இறப்புக்கு முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதால் விசாரணை நடக்கிறது. பெற்ற தாய் படும் அவஸ்தையை பார்க்க முடியாமலும், தன்னால் அம்மா மேலும் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும் சத்யா தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரிய சோகத்தை தந்துள்ளது.

    English summary
    21 year old young woman committed suicide due to dept near coimbatore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X