சென்னையில் இருந்து கொழும்பு சென்ற 16 பேருக்கு கொரோனா- சென்னை விமானங்களுக்கு தடை?
கொழும்பு: சென்னையில் இருந்து கொழும்பு வந்த 16 பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து சென்னையில் இருந்து கொழும்பு வரும் விமானங்களுக்கு தடை விதிப்பது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video
இலங்கையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இதனால் அண்மையில் நாடாளுமன்ற தேர்தலை இலங்கை நடத்தியது.
இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 16 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2918 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் மொத்தம் 2770 பேர் குணமடைந்துள்ளனர். இங்கு கொரோனாவால் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது- ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடம்
இதனிடையே இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவது குறித்து இலங்கை அரசு பரிசீலிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.