இலங்கை தாதா அங்கொட லொக்காவின் மேலும் ஒரு கூட்டாளி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை- 4 பேர் சிக்கினர்
கொழும்பு: தமிழகத்தின் கோவையில் விஷம் வைத்து கொல்லப்பட்ட இலங்கை தாதா அங்கொட லொக்காவின் மற்றொரு கூட்டாளியை இலங்கை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
இலங்கையில் போதைப் பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நிழல் உலக தாதா அங்கொட லொக்கா. இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் தலைமறைவாக இருந்தார் லொக்கா.
இந்த நிலையில் கோவையில் அங்கொட லொக்கா விஷம் வைத்து கொல்லப்பட்டு மதுரையில் எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே அங்கொட லொக்காவின் கூட்டாளிகளை இலங்கை அரசு அடுத்தடுத்து வேட்டையாடி வருகிறது. ஏற்கனவே அங்கொட லொக்காவின் கூட்டாளி அசித்த ஹேமதிலக்கவை இலங்கை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
அங்கொடா லொக்கா ...தொழில் கூட்டாளி...இலங்கையில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!!
தற்போது சமிந்தா என்ற மற்றொரு கூட்டாளியையும் இலங்கை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் இலங்கையைவிட்டு தப்ப முயன்ற 4 லொக்காவின் கூட்டாளிகளும் சிக்கியுள்ளனர்.