கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் தியேட்டர் அருகே கண்டெடுக்கப்பட்ட பைக்கில் இருந்து குண்டு வெடித்தது- வீடியோ

    கொழும்பு: இலங்கையில் இன்று நீதிமன்ற வளாகம் அருகே, வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல்கட்ட தகவல்படி, இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் இல்லை.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையில் மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் அதுவும் குறிப்பாக தலைநகர் கொழும்பில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்கள் சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியாகி பீதியை ஏற்படுத்தின.

    Bomb blast in Srilanka court

    கொழும்பு திரையரங்கள் அருகே பைக்கில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்புடன் வெடிக்க வைக்கப்பட்டது. முன்னதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று, காலை கொழும்பு நகரிலிருந்து, கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள பூகொட நீதிமன்ற வளாகத்தில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

    இலங்கையை உலுக்கிய மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது! இலங்கையை உலுக்கிய மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது!

    நீதிமன்றத்தின் பின் பகுதியில், உள்ள காலி இடத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால், இந்த குண்டு வெடிப்பில், யாருக்கும் காயம் இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Bomb blast in Srilanka court on Monday push panic button to the citizen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X