இலங்கையில் கொரோனாவுக்கு முதல் பலி- வெளிநாடுகளில் 3 இலங்கையர் உயிரிழப்பு
கொழும்பு: இலங்கையில் கொரோனா தொற்று நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையில் கொரோனாவுக்கான முதல் பலி இது.
இலங்கையிலும் கொரோனாவின் தாக்கம் படுதீவிரமாக உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனாவுக்கு இதுவரை 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் புத்தளம் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். இது இலங்கையில் கொரோனாவுக்கான முதலாவது உயிரிழப்பு.
வெளிநாடுகளில் 3 இலங்கையர் பலி
Recommended Video
இதனிடையே சுவிட்சர்லாந்தில் கொரோனா தாக்குதலில் பலியானோரில் 2 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இங்கிலாந்திலும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். வெளிநாடுகளில் இலங்கையை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.