உறுதி மிக்க இலங்கையை கட்டியெழுப்புவோம்.. ராஜபக்சே தம்பி மகிழ்ச்சி!
கொழும்பு: இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள தனது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை வாழ்த்தியுள்ளார் தம்பிய கோத்தபயா ராஜபக்சே.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரின் தள நாயகர்களில் முக்கியமானவர் இந்த கோத்தபயா ராஜபக்சே. ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, பொன்சேகா ஆகியோர் இணைந்துதான் தமிழர்களை ஒடுக்கி அழித்து நிர்மூலமாக்கியவர்கள்.
ராஜபக்சே பதவியிழந்து போன பிறகு கோத்தபயாவும் அடையாளம் இல்லாமல் போய் விட்டார். ஆனால் மொத்த ராஜபக்சே குடும்பமும் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தது. இன்று அது வந்து விட்டது. மீண்டும் அதிகார வட்டத்திற்குள் வந்து விட்டார் ராஜபக்சே. இதை இலங்கை மக்கள் குறிப்பாக தமிழர்களும் அதேபோல சிங்களர்களும் கூட எதிர்பார்க்கவில்லை.
ராஜபக்சே பிரதமர் ஆனதை வரவேற்றுள்ளார் கோத்தபயா. இதுகுறித்து அவர் போட்டுள்ள பேஸ்புக் பதிவில், இலங்கையின் புதிய பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எமது இதயப்பூர்வமான வாழ்த்துகள். உறுதிமிக்க இலங்கையினை இன்றுமுதல் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம் என்று கூறியுள்ளார்.