கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை
கொழும்பு: கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்துள்ளது இலங்கை.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகள் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரக் கூடியவை. இந்த துறைமுகத்தின் தெற்கு பகுதியை சீனாவுக்கு இலங்கை தாரை வார்த்து கொடுத்திருந்தது.
இந்த நிலையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் இந்தியா-இலங்கை- ஜப்பான் கையெழுத்திட்டன. இது சீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இலங்கை தொழிற்சங்கங்களை சீனா தூண்டிவிட்டு, கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க கூடாது என போராட்டங்களை நடத்த செய்தது. இதனால் இலங்கை அரசும் கிழக்கு முனையத்தை இந்தியாவிடம் கொடுக்காமல் பின்வாங்கியது.
அலெக்ஸி நவல்னி விஷ விவகாரம்: ரஷ்யா மீது முதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா
இந்த பின்னணியில் தற்போது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவுக்கும் இலங்கை வழங்கியுள்ளது இலங்கை. இது இலங்கையில் இந்தியா இடைவிடாது மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகளுக்கான மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.