இலங்கை அருகே இந்தியா வந்த கச்சா எண்ணெய் கப்பலில் பயங்கர தீ- 19 பேர் மீட்பு
கொழும்பு: இந்தியா நோக்கி வந்த கச்சா எண்ணெய் கப்பலில் இலங்கை கடற்பரப்பில் ப்யங்கர தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் இருந்த 19 பேர் இந்திய கடற்படைகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
MT New Diamond என்ற கச்சா எண்ணெய் கப்பல், குவைத்தில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 37 நாட்டிகல் மைல் தொலைவில் வியாழக்கிழமை காலை திடீரென கப்பலில் தீ பிடித்தது.
இதனையடுத்து இலங்கை கடற்படை, விமானப் படை விமானங்கள் அப்பகுதிக்கு விரைந்தன. மேலும் இந்தியாவின் உதவியையும் இலங்கை கோரியது.
இந்தியாவில் நடப்பு ஆண்டில் 20 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடுகள்... மோடி பெருமிதம்
இந்தியாவின் கடற்படை கப்பல் அங்கு விரைந்து சென்று கப்பலில் தத்தளித்த 19 பேரை மீட்டனர். கப்பலில் இருந்த ஒருவரது நிலைமை என்ன என்பது தெரியவில்லை.
இந்த கப்பலில் 2,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருந்தது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் மிகப் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கப்பல் பனாமா நாட்டுக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.