இலங்கை: ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் கனிமொழி - சிறிசேனா, ரணிலுடன் சந்திப்பு
கொழும்பு: இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றார். மேலும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரையும் கனிமொழி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் சந்தித்து பேசினர்.
அண்மையில் ரவூப் ஹக்கீமின் மகளது திருமணம் கொழும்பில் நடைபெற்றது. இத்திருமணத்தில் இலங்கை மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் இருந்து திமுக எம்.பி கனிமொழி, மமகவின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்தனர். பின்னர் கனிமொழி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவையும் சந்தித்து பேசினர்.
சுபஶ்ரீ மரணம்: அலட்சியம், மெத்தனம்...நிர்வாகத்தை அரசு ஒழுக்கமாக நடத்த வேண்டும்- ஹைகோர்ட் விளாசல்