முடிவே வரவில்லை.. முந்தியடித்து மோடிக்கு முதலில் வாழ்த்து சொன்ன வெளிநாட்டு அதிபர் யார் தெரியுமா?
கொழும்பு: தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 17வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், மதியம் 1 மணிக்கெல்லாம் இலங்கை அதிபரிடமிருந்து வந்தது ஒரு ட்வீட்.
அதில், சிறிசேனா கூறியுள்ளதாவது: மறுபடியும் உங்கள் தலைமையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதற்கு வாழ்த்துக்கள். இந்தியாவுடன் எதிர்காலத்திலும், ஆக்கப்பூர்வமான, நல்ல உறவை இலங்கை எதிர்பார்க்கிறது. இவ்வாறு மோடியை குறிப்பிட்டு சிறிசேனா ட்வீட் வெளியிட்டுள்ளார்.
Congratulations on your victory and the peoples re-endorsement of your leadership.
— Maithripala Sirisena (@MaithripalaS) May 23, 2019
Sri Lanka looks forward to continuing the warm and constructive relationship with India in the future.@narendramodi
மோடியை வாழ்த்தி, அதுவும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே வாழ்த்தி அறிக்கை வெளியிட்ட முதல் வெளிநாட்டு தலைவர், இலங்கை பிரதமர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அற்புதமான வெற்றி போங்க.. உலக நாடுகளில் முதல் ஆளாய் மோடிக்கு வாழ்த்து சொன்ன இலங்கை