Breaking News Live: இலங்கை கொடூர குண்டுவெடிப்புக்கு 207 பேர் பலி.. ரஜினி, சீமான் கடும் கண்டனம்
இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
Recommended Video
கொழும்பு: இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 5 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 207க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. மொத்தம் ஆறு இடங்களில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது.
மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. அதன்பின் 6 அணி நேரமா கழித்து இன்னும் 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 450க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இலங்கை குண்டுவெடிப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் டிவிட்
ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
— Rajinikanth (@rajinikanth) April 21, 2019
தூதரக அதிகாரிகளுடன் இதுகுறித்து பேசி வருகிறேன் - சுஷ்மா சுவராஜ்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா டிவிட்
Colombo - I am in constant touch with Indian High Commissioner in Colombo. We are keeping a close watch on the situation. @IndiainSL
— Chowkidar Sushma Swaraj (@SushmaSwaraj) April 21, 2019
புனித ஆண்டனி சர்ச் கொழும்பிலேயே மிகவும் பிரபலமானது - ராதிகா
எப்போதும் கூட்டமாக இருக்கக் கூடிய சர்ச் அது - ராதிகா
அங்கு குண்டுவெடிப்பு நடந்திருப்பது கேட்கவே கஷ்டமாக உள்ளது - ராதிகா
போன் செய்து அங்கு கேட்டபோது 2 குண்டு வெடிப்பு நடந்ததாக கூறினர் - ராதிகா
சின்னமான் ஹோட்டல், சாங்கிரிலால் ஹோட்டலில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது - ராதிகா
2 நாட்களுக்கு முன்பு நான் சின்னமான் ஹோட்டலில் தங்கியிருந்தேன் - ராதிகா
சகோதர், அவரது குடும்பம், உறவினர்கள் அனைவரும் தங்கியுள்ளனர் - ராதிகா
எனது உறவினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் - ராதிகா
ஈஸ்டர் தினத்தின்போது நடந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது - ராதிகா