இலங்கை அதிபர் தேர்தல்: மாஜி ராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க களத்தில் குதிக்கிறார்
Recommended Video
சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக்க ஐதேக செயற்குழு ஒப்புதல்! | Sajith Premadasa
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்கவும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் வேட்பாளராக அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார்.
ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். ஜேவிபியின் அனுரா குமார திசாநாயக்க உள்ளிட்டோரும் களத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் தேசிய மக்கள் இயக்கத்தின் (NPM) வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
The National People’s Movement (NPM) will announce Former Army Commander Maj. Gen (Rtd.) Mahesh Senanayake as its Presidential Candidate.
Story first published: Saturday, September 28, 2019, 13:29 [IST]