ரணில் கட்சியின் எம்பிகள் 2 பேர் கைது!
கொழும்பு : இலங்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிர்வாகிகளை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 2 எம்பிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ரணில் பதவிநீக்கம் செய்யப்பட்டது முதல் அவரது கட்சியினர் மீது சிறிசேனா ஆதரவாளர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் சனிக்கிழமை இரவு சிலோன் பெட்ரோலிய கழகத்திற்குள் நுழைய முயன்ற ரணில் கட்சியை சேர்ந்த அர்ஜுனாவை சிறிசேனா ஆதரவாளர்கள் சூழ்ந்ததால் பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த அந்த இடம் கலவர பூமியானது.
இந்த விவகாரம் தொடர்பாக அர்ஜுனா கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் ரணில் கட்சியை சேர்ந்த எம்பிகள் 2 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்னபுரா தொகுதி எம்.பி. ஹேச விதங்கே, களுதரா தொகுதி எம்.பி பலித குமார தேவரபெருமா உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் முன்னணி நிர்வாகிகளை தாக்கியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் கூடும் தேதியை மாற்றியது ஏன்... சிறிசேனாவுக்கு சபாநாயகர் கேள்வி!