கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை அரசை கலைக்க வேண்டும்.. சிறிசேனா பதவி விலக வேண்டும்.. ராஜபக்சே கோரிக்கை!

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் சிறிசேனா பதவி விலக வேண்டும், அரசை கலைக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கோரிக்கை வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் சிறிசேனா பதவி விலக வேண்டும், அரசை கலைக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த நிலையில் இன்று அவசரமாக அங்கு நாடாளுமன்றம் கூடியது. இதில் இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

இலங்கை குண்டு வெடிப்புகள் பின்னணியில் இருப்பது எந்த அமைப்பு? வெளியானது வீடியோ ஆதாரம்இலங்கை குண்டு வெடிப்புகள் பின்னணியில் இருப்பது எந்த அமைப்பு? வெளியானது வீடியோ ஆதாரம்

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

மகிந்த ராஜபக்சே தனது பேச்சில், இந்த தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல். இலங்கையை இந்த தாக்குதல் உலுக்கி உள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது. இலங்கையில் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

என்ன தாக்குதல்

என்ன தாக்குதல்

இப்படி ஒரு தாக்குதல் நடக்க போகிறது என்று அரசுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. ஆனால் அரசு மக்களை காக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு வேண்டும் என்றே இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்துள்ளது.

முன்னாள் அதிபர்

முன்னாள் அதிபர்

நான் இதை அரசியலாக்க விரும்பவில்லை. இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யவும் நினைக்கவில்லை. ஆனால் இந்த நாட்டின் முன்னாள் அதிபர் என்ற முறையில் கேட்கிறேன். இதை எப்படி நடக்க விட்டார்கள். ஏன் அரசு இவ்வளவு மெத்தனமாக நடந்து கொண்டது.

அரசு விலகல்

அரசு விலகல்

தன் சொந்த மக்களை காப்பாற்ற இயலாத அரசு இருந்தும் என்ன பயன்?. இந்த அரசு உடனடியாக கலைக்கப்பட வேண்டும். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும், என்று ராஜபக்சே கோரிக்கை வைத்துள்ளார்.

English summary
Sri Lanka President should resign says Mahinda Rajapaksa in Parliament, after the bomb blast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X