குண்டு வெடிப்பு பீதி.. இலங்கையில் ஈஸ்டர் சிறப்பு நிகழ்ச்சிகள் ரத்து.. மக்கள் கூட்டமாக சேர தடை
Recommended Video
கொழும்பு: இலங்கையில் தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் இன்று காலை முதல் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில், சுமார் 200 பேர் பலியாகியுள்ள நிலையில், அங்கு ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்கள் என்பது, தலைநகர் கொழும்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாகும். இதையடுத்து, கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், ஈஸ்டர் பிரார்த்தனைகள் ரத்து செய்யப்படுவதாக, அம்மாவட்டத்தின் பேராயர் ரஞ்சித் இன்று அறிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.. பிரதமர் மோடி ட்வீட்
நாடு முழுக்கவுமே சிறப்பு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை கிறிஸ்தவர்கள் கைவிட்டுள்ளனர். மேலும், நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெருமளவிற்கு ஒரே இடத்தில் கூடும் இடங்களை தீவிரவாதிகள் குறி வைக்க கூடும் என்பதால், மக்கள் ஒரே இடத்தில் கூடும் நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று, காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.