ஷாக் கொடுத்த ராஜபக்சே, சிறிசேனா கூட்டணி... அரசியல் சாசன நெருக்கடியை நோக்கி இலங்கை?
கொழும்பு : முன்னாள் அதிபர் ராஜபக்சே மற்றும் தற்போதைய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் கூட்டணி அமைத்திருப்பது உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மஹிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுள்ளதால் இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அரசமைப்பு 19வது திருத்தப்படி பெரும்பான்மை இல்லாத நிலையில் பிரதமரை பதவி விலக்குவதற்கு சட்டம் அனுமதிஅளிக்கவில்லை என்று அரசியல் உற்று நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ராஜபக்சேவை பிரதமராக்கியுள்ள சிறிசேனாவின் முடிவால் அரசமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. ராஜபக்சே, சிறிசேனா கட்சிக்கு மொத்தம் 95 உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் உள்ளனர். பதவி பறிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவிற்கு இந்த இரு கட்சிகளை விட அதிக உறுப்பினர்கள் அதாவது சுமார் 106 எம்பிகளின் பலம் உள்ளது.