இலங்கையில் வெடிபொருள்கள் தொடர் பறிமுதல்.. ரயில் நிலையம் அருகே 3 பேர் கைதால் பரபரப்பு
கொழும்பு: இலங்கையில் வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அதை வைத்திருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையில் கடந்த வாரம் மனிதவெடிகுண்டுகள் 8 இடங்களில் வெடித்ததால் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புலனாய்வு துறை
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இலங்கையில் 160 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
மக்களுக்கு அச்சம்
இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் ஆங்காங்கே வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதையடுத்து மக்களுக்கு அச்சம் அதிகரித்துள்ளது.
சோதனை
இந்த நிலையில் இலங்கை வெள்ளவத்தை ரயில்நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருளுடன் சிலர் சுற்றி வருவதாக கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை நடத்தினர்.
கடற்படையினர் கைது
அப்போது 3 சக்கர வண்டியில் சி4 என்ற வெடிபொருளை 3 பேர் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.