இலங்கையில் புதிய திருப்பம்... ஜூன் 20-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்!
கொழும்பு: இலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அப்போது தேர்தல் நடைபெறுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கையில் ஏப்ரல் 25-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறு என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கத்தால் நாடாளுமன்ற தேர்தலை ஒத்தி வைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
இதனை ஏற்று இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. அதேநேரத்தில் இலங்கையில் கொரோனா தாக்கம் படிப்படியாகவும் குறைந்தது.
இதனால் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கை வெளியிட்டது இந்த அறிவிக்கை தொடர்பாக கொழும்பில் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெய்னரில் பதுங்கி பயணம்.. நாமக்கல்லில் 24 பேர் மீட்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜூன் 20-ல் தேர்தல் நடத்த பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜூன் 20-ந் தேதியும் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவது சந்தேகமே என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.