மீண்டும் கைக்கு வந்தது அதிகாரம்.. இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்பு!
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே இன்று பதவி ஏற்றுள்ளார்.
Recommended Video
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே இன்று பதவி ஏற்றுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று மதியம் நிறைவு அடைந்தது. சுமார் 12 மணி நேரமாக அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று மாலையில் கடைசியாக அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததால் அங்கு தேர்தல் நடந்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து காலையில் இருந்து முன்னிலை வகித்து வந்தார். இவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் போட்டி நிலவி வருகிறது.
வெற்றி பெற்றார்
இறுதியில் இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார்.
என்ன வாக்குகள்
52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார்.
கூட்டணி வேட்பாளர்
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5564239 வாக்குகள் பெற்றார். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே இன்று காலை பதவியேற்றார். இதற்காக கொழும்பில் பெரிய அளவில் விழாக்கள், கொண்டாட்டங்கள் இன்று நடந்தது
வாழ்த்து
இலங்கையின் 7-வது அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவியேற்றார். அதிபர் தேர்தலில் வென்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளை சேர்ந்த பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலம் இவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.