இலங்கை தேர்தல்.. சஜித் பிரேமதாசவிற்கு தமிழர்கள் மாஸ் ஆதரவு.. வடக்கு மாகாணத்தில் கோத்தபய பின்னடைவு!
தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார்.
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார். வடக்கு மாகாணத்தில் கோத்தபய ராஜபக்சே பின்னடைவை சந்தித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததால் அங்கு தேர்தல் நடந்துள்ளது. இதனால் இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு முடிந்து நேற்று இரவில் இருந்து வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. நாளை மாலைக்குள் இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான் வெற்றிபெற்றுவிட்டேன்.. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே வெற்றியை அறிவித்த கோத்தபய ராஜபக்சே
மொத்தமாக எப்படி
இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசவை விட 90697 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே 1516260 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 14255623 வாக்குகள் பெற்றுள்ளார்.
எப்படி முன்னிலை
ஆனால் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார்கள். அங்கு உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சேவை விட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
என்ன ஆதரவு
தமிழரசுக் கட்சி உள்ளிட்டவை சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறது. இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தனர். அதனால் தமிழர்கள் வாக்கு சஜித் பிரேமதாசவிற்கு அதிகமாக சென்றுள்ளது. உதாரணமாகயாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் சஜித் பிரேமதாச கோத்தபய ராஜபக்சேவை விட 2.40 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
ஆனால் என்ன
ஆனால் தெற்கு மாகாணங்களில் கோத்தபய ராஜபக்சே அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அவர் முன்னிற்கு வகிக்கிறார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 55,585 வாக்குகள் பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே வெறும் 3,238 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு எங்கு
அதேபோல் மன்னார் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 53,602 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 6,435 பெற்றுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 47,594 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 4,252 பெற்றுள்ளார். வவுனியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 65,141 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 13,715 பெற்றுள்ளார்.