நவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு நடிகர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியா அறிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபர் தேர்தல் களைகட்டியுள்ளது. மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார்.
இதேபோல் ஜேவிபி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தமிழர் கட்சிகள் இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் நவம்பர் 16-ந் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியா அறிவித்துள்ளார். இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 7-ந் தேதி தொடங்குகிறது.
Comments
English summary
The Makkal Neethi maiyam president actor Kamal condemned the new education policy to amend public exams for the classes 5 and 8.
Story first published: Wednesday, September 18, 2019, 19:25 [IST]