நாடாளுமன்றம் கூடும் தேதியை மாற்றியது ஏன்... சிறிசேனாவுக்கு சபாநாயகர் கேள்வி!
கொழும்பு : நாடாளுமன்றம் கூடும் தேதியை மாற்றியது ஏன் என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அரசியலில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பற்றவைத்த நெருப்பு அணையாமல் ஜோதியாக சுடர்விட்டு எரிந்து கொண்டே இருக்கிறது. சிறிசேனா வைத்த நெருப்பு இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கே வழிவகுக்குமா என்று உலக நாடுகள் பலவும் உற்று நோக்கி வருகின்றன.
பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தன்னை கொல்ல சதித் திட்டம் தீட்டினார், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருந்தார் என்று காரணம் சொல்லி அவரை பிரதமர் பதவியில் இருந்து சிறிசேனா நீக்கினார். இந்த சூட்டோடு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ராஜபக்சேவை பிரதமராக்கியதற்கு ரணில் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பழைய காலத்து மரகத நடராஜர் சிலை கொள்ளை முயற்சி... தடுத்து சிறுத்திய சாதுர்ய காவலாளி!
பெரும்பான்மையில்லாததால் எதிர்ப்பு
ராஜபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு பெரும்பான்மையே இல்லாத போது மஹிந்த எப்படி பிரதமராக முடியும் என்பது தான் எதிர் தரப்பின் கேள்வி. இதனால் அதிபர் சிறிசேனா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ரணிலுக்கு ஜெயசூர்யா ஆதரவு
மேலும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார். ரணிலுக்கே பெரும்பான்மை இருப்பதால் அவர் தான் பிரதமர் என்று தொடர்ந்து கூறியும் வருகிறார்.
முடக்கப்பட்ட நாடாளுமன்றம்
ராஜபக்சேவை பிரதமராக அறிவித்ததின் அடுத்த நகர்வாக நாடாளுமன்றத்தை நவம்பர் 16ம் தேதி வரை தற்காலிகமாக முடக்கி வைத்தார் சிறிசேனா. ஆனால் சர்வதேச நாடுகளும், ஐ.நா சபையும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் பெரும்பான்மையை நிரூபிப்பவரே ஜனநாயக முறையில் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று அழுத்தம் தந்தன.
ஏன் இந்த மாற்றம்
இதன் விளைவாக சிறிசேனா நவம்பர் 14ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று நேற்றைய தினம் அறிவித்தார். இந்நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா சிறிசேனாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நாடாளுமன்றம் கூடும் தேதியை முன்கூட்டியே மாற்றியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உறுதியாக இருக்கும் ஜெயசூர்யா
மஹிந்த ராஜபக்சேவை ஒரு போதும் பிரதமராக ஏற்க முடியாது. பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமர் என்றும் ஜெயசூர்யா தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.