இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை?
கொழும்பு: இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசு தடை விதித்துள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் 2016-ம் ஆண்டு முதல் சுதந்திர தின விழாவில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் 72-வது சுதந்திர தினம் 2020 பிப்ரவரி 4-ந் தேதி நடைபெறுகிறது.
கொழும்பு சுதந்திர தின சதுக்கத்தில் இந்த விழா நடைபெறும். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை விதிக்கப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
என்னுடன் ஜாலியா இருந்தார் அங்கிள்... கல்யாணம் செய்ய ஆசைப்பட்டாரு.. மிரட்டினார்.. கொன்னுட்டேன்!
இலங்கையில் நடைமுறையில் இருந்து வருவதை திடீரென கோத்தபாய அரசாங்கம் தடை செய்திருப்பதாக வெளியான செய்திகள் தமிழர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.