இலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொழும்பு: இலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது கொரோனா தொற்று நோய். இதனால் இலங்கையில் ஏப்ரல் 25-ந் தேதி நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில் இலங்கையிலும் கொரோனாவின் தாக்கம் இருந்து வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்டவை முழுமையாக அமல்படுத்தப்பட்டிருந்தன. இலங்கையில் கொரோனாவால் 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி- 0 டாலருக்கும் கீழே போனது
இதனிடையே கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டன. இதனையடுத்து இலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணைக் குழு வெளியிட்டுள்ளது.