இந்தியாவில் பவுத்தர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் முதல் மாநிலம் லடாக்: ரணில் வரவேற்பு
கொழும்பு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அறிவிக்கை மூலம் இதை பிரகடனப்படுத்தினார்.
இது இந்தியாவின் உள்விவகாரம் என பல்வேறு நாடுகள் அமைதி காத்து வருகின்றன. பாகிஸ்தான் மட்டுமே மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
I understand Ladakh will finally become a Union Territory. With over 70% Buddhist it will be the first Indian state with a Buddhist majority. The creation of Ladakh and the consequential restructuring are India's internal matters. I have visited Ladakh and it is worth a visit.
— Ranil Wickremesinghe (@RW_UNP) August 6, 2019
இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் நடவடிக்கையை வரவேற்பதாக பதிவிட்டுள்ளார். அப்பதிவில் ரணில் கூறியுள்ளதாவது:
இந்த தேசம் மக்களால் உருவானது.. கடைசியில் மௌனத்தை கலைத்தார் ராகுல் காந்தி.. செம்ம கருத்து
யூனியன் பிரதேசமாக லடாக் பிராந்தியம் உருவாகிவிட்டது. 70%-க்கும் அதிகமான பவுத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முதல் மாநிலமாக லடாக் உருவாகி உள்ளது. லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கம், மறுசீரமைப்பு ஆகியவை இந்தியாவின் உள்விவ்வகாரம்.
லடாக் பிராந்தியத்துக்கு பலமுறை நானும் பயணம் செய்துள்ளேன். இவ்வாறு ரணில் கூறியுள்ளார்.