என்னோட நாய்களை எடுத்துக்கங்க.. வெடிகுண்டுகளை கண்டுபிடிங்க.. ராணுவத்துக்கு பெண் தந்த அதிசய தானம்
இலங்கை ராணுவத்துக்கு 5 வளர்ப்பு நாய்களை அன்பளிப்பாக ஒரு பெண் தந்துள்ளார்.
Recommended Video
கொழும்பு: "இந்தாங்க.. என்கிட்ட இருக்கிற இந்த 5 நாய்களையும் நீங்களே எடுத்துக்குங்க.. பயிற்சி கொடுங்க.. வெடி பொருட்களை கண்டுபிடிக்க இந்த நாய்களுக்கு டிரெய்னிங் தாங்க" என்று ஒரு பெண் தான் வளர்த்து வரும் நாய்களை இலங்கை ராணுவத்துக்கு நன்கொடையாக அளித்தார்.
இலங்கை குண்டுவெடிப்புக்கு பிறகு அங்கே ஒருநாள்கூட யாரும் நிம்மதியா இல்லை.. இருக்கவும் முடியல. 250 பேருக்கும் மேலாக கொல்லப்பட்ட பாதிப்பு இன்னும் நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஒரு பெண் தன் நாய்களை ராணுவத்துக்கு தந்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் டாக்டர் ஷிரு விஜெமானே, இவர் ஒரு சர்வதேச பல்கலைக்கழக விரிவுரையாளர். 5 ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்களை வளர்த்து வந்திருக்கிறார். எல்லா நாயும் ஒரே குடும்பத்தை சேர்ந்ததுதான்!
தாய் நாய்க்கு 2 வயசாம்.. மற்ற நாய்களுக்கு இப்பதான் 6 மாசம் ஆகுதாம். இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரி பிரிகேடியர் அமரசேகராவை கொழும்புவில் உள்ள வீட்டிற்கே வரவழைத்து இந்த நாய்களை பரிசாக தந்திருக்கிறார் இந்த பெண்.
வங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தாத ஆந்திர எம்.பி வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ
வெடி பொருட்கள், போதை மருந்துகளை கண்டுபிடிக்க ராணுவத்தினர் சிரமப்படுவதால் இந்த நாய்களை நன்கொடையாக அளித்துள்ளாராம். வெடிகுண்டுகளை கண்டுபிடித்து தருவது சம்பந்தமான டிரெயினிங் தந்தால், குண்டுவெடிப்பு போன்ற நெருக்கடியான நேரத்தில் நாய்களின் மோப்ப சக்தி பெரிய உதவியாக ராணுவத்துக்கு இருக்கும் என்று இவர் சொல்கிறார்.
அதன்படி இந்த 5 நாய்களும், ராணுவத்தின் வெடிகுண்டுகள் கண்டறிந்து அகற்றும் துறையில் சேர்க்கப்பட்டுள்ளன. கொஞ்ச நாள் டிரெயினிங் ஆன பிறகு நாய்களுக்கு முக்கிய பொறுப்பு தரப்படுமாம்!