விடுதலைப் புலிகளின் பெயரில் பரவும் அறிக்கை.. நம்ப வேண்டாம் என முன்னாள் போராளிகள் கோரிக்கை
Recommended Video
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அறிக்கை பரவி வருகிறது. அதை நம்ப வேண்டாம் என்று முன்னாள் போராளிகள் கோரியுள்ளனர்.
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் அங்கு பதட்டச் சூழல் நிலவுகிறது. ஐஎஸ் அமைப்பினர்தான் இந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி பரவி வருகிறது. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னாள் போராளிகள் தரப்பில் கூறுகையில், இலங்கையில் நிலவும் அமைதியற்ற சூழலைப் பயன்படுத்தி, இரு இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ராணுவம் இதுபோன்ற அறிக்கைகளை நம்ப வேண்டாம். அதேபோல பொதுமக்களும் இதை நம்ப வேண்டாம் என்று முன்னாள் போராளிகள் கூறியுள்ளனர்.