ஆதரவற்ற குழந்தைகளுக்கு உங்கள் உதவி தேவை.. நீங்கள் நினைத்தால் செய்யலாம்
சென்னை: குழந்தைகளின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய உங்களின் நன்கொடை உதவிகள் தேவைப்படுகிறது.
சேவ் தி சில்ட்ரன் (Save the Children) தன்னார்வல அமைப்பு, 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் 1 கோடி (10 மில்லியன்) குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றிக் காட்டியுள்ளது.
கஷ்டப்படும், குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் நல்ல வாழ்க்கை, வாழ்க்கையை காப்பாற்றும் சுகாதார சேவைகள் மற்றும் தீங்கு மற்றும் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறோம்.
தற்போது, இந்தியாவின் 18 மாநிலங்களில் 65 திட்டங்கள் இயங்குகின்றன. 2018 ஆம் ஆண்டில், நாங்கள் மொத்தம் 12.03 லட்சம் குழந்தைகளை சென்று அடைந்தோம். அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகளை செய்தோம்.
சேவ் தி சில்ட்ரன் அமைப்புக்கு கொடுக்கப்படும், அனைத்து நன்கொடைகளுக்கும் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80 ஜி இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகின்றன.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, குழந்தைகளுக்கு, கடந்த, ஏப்ரல் 27 வரை நாடு முழுக்க 3640 வீடுகளில் சேவ் தி சில்ட்ரன் அமைப்பு மூலம் உணவு பொருட்கள், சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 500க்கும் அதிகமான குழந்தைகளின் வீடுகளில் விட்டமின் ஏ இருக்கும் பால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல சேவைகள் செய்துவரும் இந்த அமைப்புக்கு உங்கள் நிதி உதவி தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த நிதியுதவியை செய்ய இணையதளம் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
RECOMMENDED STORIES